Sunday, May 1, 2011
பெய்யெனப் பெய்தது மழை
இரு தினங்களுக்குமுன் நண்பர் ஒருவர் புதுகையின் பிரதான வீதியில் சென்றுகொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்துவிட - முகத்தில் காயங்கள் ! மூக்கில் உதிரம் ! முன்பின் தெரியாத நபர் உதவிக்கு வந்து அவரை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனையில் முதலுதவிக்கு சேர்கிறார் . பின் அவரிடம் சாவியை வாங்கிகொண்டு வண்டியை எடுத்து வர விரைகிறார் .இடையில் நண்பர் என்னை அலைபேசியில் அழைக்க ,மருத்துவமனை விரைகிறேன் . அந்த நபர் 1 கிலோமீட்டர் வண்டியை தள்ளிக்கொண்டு வருகிறார் .வண்டி ஓட்ட தெரியாதாம்.விசாரித்ததில் ஆட்டோ ,மருந்துகள் , மருத்துவமனை செலவு என 150 ரூபாய் செலவளித்திருக்கிறார்..நாங்கள் நன்றியுடன் திருப்பித் தர ."ரொம்ப நன்றி சார்! என் ஒரு நாள் சம்பளம் !ரெடிமேட் கடையில் வேலை பாக்கிறேன்! எங்கள் ஊர் பஸ் போயிருக்கும் .. friend வீட்டில் தங்கிட்டு , காலையில் போய்க்கிறேன் " கூறிவிட்டு விறு விறு வென சென்றுவிட்டார் ..... அன்று இரவு பெய்யெனப் பெய்தது மழை !!!!ள் நன்றியுடன் திருப்பித் தர ."ரொம்ப நன்றி சார்! என் ஒரு நாள் சம்பளம் !ரெடிமேட் கடையில் வேலை பாக்கிறேன்! எங்கள் ஊர் பஸ் போயிருக்கும் .. friend வீட்டில் தங்கிட்டு , காலையில் போய்க்கிறேன் " கூறிவிட்டு விறு விறு வென சென்றுவிட்டார் ..... அன்று இரவு பெய்யெனப் பெய்தது மழை !!!!
Monday, March 14, 2011
Wednesday, July 21, 2010
தொணதொண என நீட்டி முழங்குவாய் ....
அறிகுறிகள் இன்னதெனப் பகுத்தறிதல் வேண்டும் !
இடமென்றால் வலம் திரும்புவாய் ....
சரியாய் அமர்த்திப் பரிசோதிக்க வேண்டும் !
வாயில் துணி வைக்கச் சொன்னால்
மிகச்சரியாய் முகத்துக்கு நேராய் இருமுவாய் ....
கடிந்து உரைக்காதிருத்தல் வேண்டும் !
நீர் ரத்தம் பரிசோதிக்கச் சொன்னால்
கொள்ளைக்காரனைப் போல் பார்ப்பாய் ....
அவசியம் பற்றி வகுப்பே எடுக்க வேண்டும் !
நாட்கள் மூன்றுக்குப் பரிந்துரைத்தால்
வேளை ஒன்றுக்கு மாத்திரை வாங்குவாய் ...
சகலமும் சரியாக வேண்டும் !
மறுவருகை அடுத்த வாரமென்றால்
மதமே கழித்து வருவாய் .....
அன்று நானே காய்ச்சலில் படுத்திருந்தால்
வந்தது வீணென்று வசை பாடிச் செல்வாய் !
நிச்சயமாய் இது மளிகை அல்ல ....
ஆனாலும் நடந்துகொள்கிறாய் மோசமான
வாடிக்கையாளன்போல்!
அறிகுறிகள் இன்னதெனப் பகுத்தறிதல் வேண்டும் !
இடமென்றால் வலம் திரும்புவாய் ....
சரியாய் அமர்த்திப் பரிசோதிக்க வேண்டும் !
வாயில் துணி வைக்கச் சொன்னால்
மிகச்சரியாய் முகத்துக்கு நேராய் இருமுவாய் ....
கடிந்து உரைக்காதிருத்தல் வேண்டும் !
நீர் ரத்தம் பரிசோதிக்கச் சொன்னால்
கொள்ளைக்காரனைப் போல் பார்ப்பாய் ....
அவசியம் பற்றி வகுப்பே எடுக்க வேண்டும் !
நாட்கள் மூன்றுக்குப் பரிந்துரைத்தால்
வேளை ஒன்றுக்கு மாத்திரை வாங்குவாய் ...
சகலமும் சரியாக வேண்டும் !
மறுவருகை அடுத்த வாரமென்றால்
மதமே கழித்து வருவாய் .....
அன்று நானே காய்ச்சலில் படுத்திருந்தால்
வந்தது வீணென்று வசை பாடிச் செல்வாய் !
நிச்சயமாய் இது மளிகை அல்ல ....
ஆனாலும் நடந்துகொள்கிறாய் மோசமான
வாடிக்கையாளன்போல்!
Tuesday, June 29, 2010
Monday, May 24, 2010
கல்வி போற்றுதும்
Friday, March 19, 2010
Subscribe to:
Posts (Atom)



