Wednesday, July 21, 2010

தொணதொண என நீட்டி முழங்குவாய் ....
அறிகுறிகள் இன்னதெனப் பகுத்தறிதல் வேண்டும் !
இடமென்றால் வலம் திரும்புவாய் ....
சரியாய் அமர்த்திப் பரிசோதிக்க வேண்டும் !
வாயில் துணி வைக்கச் சொன்னால்
மிகச்சரியாய் முகத்துக்கு நேராய் இருமுவாய் ....
கடிந்து உரைக்காதிருத்தல் வேண்டும் !
நீர் ரத்தம் பரிசோதிக்கச் சொன்னால்
கொள்ளைக்காரனைப் போல் பார்ப்பாய் ....
அவசியம் பற்றி வகுப்பே எடுக்க வேண்டும் !
நாட்கள் மூன்றுக்குப் பரிந்துரைத்தால்
வேளை ஒன்றுக்கு மாத்திரை வாங்குவாய் ...
சகலமும் சரியாக வேண்டும் !
மறுவருகை அடுத்த வாரமென்றால்
மதமே கழித்து வருவாய் .....
அன்று நானே காய்ச்சலில் படுத்திருந்தால்
வந்தது வீணென்று வசை பாடிச் செல்வாய் !
நிச்சயமாய் இது மளிகை அல்ல ....
ஆனாலும் நடந்துகொள்கிறாய் மோசமான
வாடிக்கையாளன்போல்!

Tuesday, June 29, 2010

வெண்மேகங்கள் ஓடி விளையாட
கவிஞன் பார்த்தான்
கற்பனை விரிந்தது !
உழவன் பார்த்தான்
வயிறு எரிந்தது !

Monday, May 24, 2010

கல்வி போற்றுதும்


சகலருக்குமான சாலையில்
துருவேறிக் கிடக்கிறது
ஆணி ...!

காலில் மிதிபடாமல்
கவனமாய்க் கடக்கிறான்
மெத்தப் படித்தவன் ...!

கையில் எடுத்துத்
குப்பையில் எறிகிறான்
சுயத்தைத் தொலைத்து அலையும்
பைத்தியக்காரன் ....!



கல்வி போற்றுதும்
கல்வி போற்றுதும்
சுயநலம் போதிக்கும்
கல்வி போற்றுதும் ?!

Friday, March 19, 2010

ஊன்றிப் படி !
படித்து ஊன்று ...!

Friday, March 12, 2010


உன்னை நினைவுப்படுத்தும்

ஒன்றுமே இன்றில்லை ....

உன் நினைவுகளைத் தவிர ...!

Tuesday, March 9, 2010

பறவையே எங்கு இருக்கிறாய் ?


தெளிவில்லாத சாம்பல் பிம்பங்களாகவாவது
உன் மனத் திரையில் உண்டா
என் நினைவுகள் ...?
இங்கே
மெருகேறிக்கொண்டே இருக்கும்
உன் நினைவுகளின் வண்ணங்களின்
துல்லியம் கூடிக்கொண்டே இருக்கிறது
ஒவ்வொரு வினாடியிலும் ..!
உன் சிறகுகளில்ஒன்று
சலினமின்றி மிதந்து வந்து
என் இமைகளை வருடியபின்தான்
வருகிறது எனக்குத் தினம் உறக்கம்...!
அந்த நிசப்த இருளின்
ஆழத்தில் நான் பயணிக்கையில்
கொத்தி எழுப்பும் உன்
கூரிய மூக்கு ...!
விழித்து உதறி
வெளியில் தேடுகிறேன்
வந்துவிட்டாயா நீயென்று ..!
மீண்டும்
எங்கிருந்தோ மிதந்துவரும்
உன் சிறகொன்று
என் இமை வருட ..!

நன்றி ..!
எனக்காக தினமும்
சிறகுகள் சிந்தும்
உனக்கு...!

Monday, March 8, 2010


நீ..................................... நான்



திருஷ்டியாக
இந்தப் பக்கத்திலாவது இருக்கட்டும்
இடைவெளி!



About Me

My photo
இலக்கிய ஆர்வலன், இசைப் பிரியன் ,தமிழர் கலாசாரம் பரவ விழைவோன்