Sunday, May 1, 2011

பெய்யெனப் பெய்தது மழை

இரு தினங்களுக்குமுன் நண்பர் ஒருவர் புதுகையின் பிரதான வீதியில் சென்றுகொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்துவிட - முகத்தில் காயங்கள் ! மூக்கில் உதிரம் ! முன்பின் தெரியாத நபர் உதவிக்கு வந்து அவரை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனையில் முதலுதவிக்கு சேர்கிறார் . பின் அவரிடம் சாவியை வாங்கிகொண்டு வண்டியை எடுத்து வர விரைகிறார் .இடையில் நண்பர் என்னை அலைபேசியில் அழைக்க ,மருத்துவமனை விரைகிறேன் . அந்த நபர் 1 கிலோமீட்டர் வண்டியை தள்ளிக்கொண்டு வருகிறார் .வண்டி ஓட்ட தெரியாதாம்.விசாரித்ததில் ஆட்டோ ,மருந்துகள் , மருத்துவமனை செலவு என 150 ரூபாய் செலவளித்திருக்கிறார்..நாங்கள் நன்றியுடன் திருப்பித் தர ."ரொம்ப நன்றி சார்! என் ஒரு நாள் சம்பளம் !ரெடிமேட் கடையில் வேலை பாக்கிறேன்! எங்கள் ஊர் பஸ் போயிருக்கும் .. friend வீட்டில் தங்கிட்டு , காலையில் போய்க்கிறேன் " கூறிவிட்டு விறு விறு வென சென்றுவிட்டார் ..... அன்று இரவு பெய்யெனப் பெய்தது மழை !!!!ள் நன்றியுடன் திருப்பித் தர ."ரொம்ப நன்றி சார்! என் ஒரு நாள் சம்பளம் !ரெடிமேட் கடையில் வேலை பாக்கிறேன்! எங்கள் ஊர் பஸ் போயிருக்கும் .. friend வீட்டில் தங்கிட்டு , காலையில் போய்க்கிறேன் " கூறிவிட்டு விறு விறு வென சென்றுவிட்டார் ..... அன்று இரவு பெய்யெனப் பெய்தது மழை !!!!

About Me

My photo
இலக்கிய ஆர்வலன், இசைப் பிரியன் ,தமிழர் கலாசாரம் பரவ விழைவோன்