Monday, March 8, 2010


நீ..................................... நான்



திருஷ்டியாக
இந்தப் பக்கத்திலாவது இருக்கட்டும்
இடைவெளி!



Thursday, December 31, 2009

முழம்போட்டும்

அளக்கமுடியவில்லை

பூவின் அழகு !

--- ஏம்பல் ராஜா

Thursday, December 24, 2009

குழப்பம் அழகு !
நீ போட்டப்
பின்னல் கோலம் !

Thursday, December 17, 2009

உலகமயமாக்கலால் ஜனவரி ஒன்று
முதலமைச்சருக்காக தை ஒன்று
பாரம்பரியமாய் சித்திரை ஒன்று
மூன்று முறை புத்தாண்டு கொண்டாடும்
முட்டாள்கள் நாங்கள் !

Thursday, November 19, 2009



மங்களகரமான துவக்கம்
பிள்ளையார் சுழியுடன்
மரண வாக்குமூலம்

ரகசியம்


அடைமழையோ சாரலோ
தெரிந்திருந்தும் சொல்வதில் லை
முதல்த்துளி !

Saturday, October 3, 2009

என்னைப் போல் ஒருவன்

டாடி மம்மினு மழலை சொன்னா சுந்தர

டமிலன் அடையுறான் பெருமை !

கோடி கோடியா கொழிச்ச கேடி கும்பிட்டா

ஓட்டு போடுறான் எருமை !

About Me

My photo
இலக்கிய ஆர்வலன், இசைப் பிரியன் ,தமிழர் கலாசாரம் பரவ விழைவோன்